"துபாயிலிருந்து இறங்கியிருக்கேன்" - இளைஞர் திடீர் அலப்பறை சலம்பிய இளைஞரை சமாதானம் செய்த ஓ.பி.எஸ்

0 646

ராமநாதபுரம் மாவட்டம் செம்படையார் குளம் கிராமத்தில் ஓ.பன்னீர் செல்வம் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, டிப் டாப்பாக கோட் சூட், கூலிங் கிளாஸ் அணிந்த இளைஞர் ஒருவர், திடீரென கூச்சலிட்டு அலப்பறை செய்தார்.

தாம் துபாயிலிருந்து இறங்கி இருப்பதாகவும் மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ்சைப் பார்த்து அவர் முழக்கமிட்டார்.

“தம்பி துபாய்யா! கூலிங் கிளாஸ் போடுங்க” என டிப் டாப் இளைஞரை சமாதானம் செய்த ஓ.பன்னீர் செல்வம், பிரச்சாரத்தைத் தொடர்ந்தார்.

ஆனால் தனியாகக் கைதட்டுவதும் கூட்டத்தை சுற்றிச் சுற்றி வீடியோ எடுப்பதுமாக அந்த துபாய் ரிட்டன் இளைஞர் அலப்பறை செய்துகொண்டிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments